Friday, January 27, 2006

திரை பாடல்கள் - 1

ஆண்

நறுமுகையே! நறுமுகையே!
நீயொரு நாழிகை நில்லாய்!
செங்கனி ஊறிய வாய் திறந்து,
நீயொரு திருமொழி சொல்லாய்!
அற்றைத் திங்கள் அந்நிலவில்,
நெற்றித்தரள நீர்வடிய,
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?

(அற்றை)

பெண்

திருமகனே! திருமகனே!
நீ ஒரு நாழிகை பாராய்!
வெண்ணிறப் புரவியில் வந்தவனே!
வேல்விழி மொழிகள் கேளாய்!
அற்றைத் திங்கள் அந்நிலவில்,
கொற்றப்பொய்கை ஆடுகையில்,
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா?

(அற்றை)
(நறுமுகையே)

ஆண்

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன?
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன?

பெண்

பாண்டிநாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன?

ஆண்

நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்

பெண்

இளைத்தேன், துடித்தேன், பொறுக்கவில்லை!
இடையினில் மேகலை இருக்கவில்லை!

(நறுமுகையே)

பெண்

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன?
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன?

ஆண்

யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன?

பெண்

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்!
உயிர்க்கொடி பூத்ததென்ன?
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்!
உயிர்க்கொடி பூத்ததென்ன?

ஆண்

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்,
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன?

(திருமகனே)

0 Comments:

Post a Comment

<< Home