Tuesday, March 28, 2006

தடம்

என்னிலிருந்து என்னைப் பிரித்துக்கொண்டு, ஒருவனாக இதை மிகுந்த பிரயாசையுடன் எழுதுகிறேன். கண்டிப்பாக இவற்றை ஒரு பதிவில் சொல்லிவிடமுடியாது. அப்படி சொல்லி முடிக்கிற விஷயமும் இல்லை இது.


பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்


நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல்காதல் கொண்டாடுதே


ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இதுவல்லவா


ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே


வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்


(பூங்காற்று)


ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்


நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்

(பூங்காற்று)



இப்படி ஒரு பாட்டு பதிவு பார்த்து, கடந்த சில நாட்களாக, என்னை கடந்து போன அந்த இனிமையான நினைவுகளில் என்னை மறுபடியும் மூழ்கடித்துகொண்டேன். எனோ தெரியவில்லை இந்த நினைவுகளில் என்னை எத்தனை முறை மூழ்கடித்துகொண்டாலும் அலுப்பதில்லை. இவற்றை நான் சுகமாக கருதுகிறேன், சுமையாக அல்ல.

இதை பற்றி ஒரு பதிவு எழுதியே ஆகவேண்டுமா என்று கடந்த சில நாட்களாக யோசித்தது உண்டு. எதை சொல்லுவது, எவ்வாறு சொல்லுவது, எதை விடுப்பது ஒன்றுமே புரியவில்லை..


இந்த நினைவுகள் என்னுள் இறக்கபோவது இல்லை
ஆனால்,
இந்த நினைவுகளுடன் நான் இறக்கபோவது உறுதி...


இப்படி பதிவுகளாக போட்டு, என்னை ரொம்பவே கடந்த 5 நாட்களாக நான் கடந்து வந்த நினைவு தடங்களுக்குள் மூழ்கடித்த சுந்தர் அண்ணனுக்கு எனது மரியாதையுடன் நன்றி கலந்த கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home