Tuesday, May 16, 2006

க.பி.க - மூத்த உறுப்பினர்




விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

பேச்சிலர்களில் மூத்தவர் ! உண்மையை உணர்ந்த ஞானி !


எங்களின் கழகத்தை சிலர் புகழுக்காக தொடங்கப்பட்டது என்று சிலர் எள்ளி நகையாடும் போது, இவர்கள் சொல்லும் சொல்லின் பொருள் அறியாது பேசுகிறார்கள்.குருவே இவர்களை மன்னியும் என்று எங்களின் கழக முதல்வன், உலக மக்களுக்கே அருள் பாலிப்பவன்னை வேண்டுகிறேன்.

24 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

ஐயா,
தெய்வானைய கல்யாணம் பண்ணி, வள்ளிய கவர் பண்ணின அந்த செந்திலாண்டவர் பேரை வச்சிகிட்டு அவர் அண்ணன் போட்டோ போட்டு பதிவு போட்டா, நாங்க நம்பிடுவோமா?

பிள்ளையாருக்கே ஏதோ ஒரு புராணப்படி (எதுன்னு நினைவில்லை..) சித்தி, புத்தின்னு ரெண்டு வைஃபாம்!!! தெரிஞ்சுகிட்டு உங்க சங்கத்துல சேத்துக்கப்பா!! அனுமார் பரவாயில்லை.. இப்படி எந்த ப்ரச்சனைலயும் மாட்டதவரு..

5/16/2006 08:51:00 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

//பிள்ளையாருக்கே ஏதோ ஒரு புராணப்படி (எதுன்னு நினைவில்லை..) சித்தி, புத்தின்னு ரெண்டு வைஃபாம்!!! தெரிஞ்சுகிட்டு உங்க சங்கத்துல சேத்துக்கப்பா!!//
இருந்துட்டு போகட்டுமே...
நாங்க என்ன்ன கலியாணமே வேண்டாமுன்னு சொல்லுற ஆளுங்களா.. இல்லையே..
இந்த போட்டா அவரு கலியாணத்துக்கு முந்தி எடுத்தது பிகிலு..

5/16/2006 08:55:00 PM  
Blogger Karthik Jayanth said...

பொன்ஸ்,

// சித்தி, புத்தின்னு ரெண்டு வைஃபாம்!!!

இது எனது அண்ணனின் புகழை இழிவு செய்யும் விதத்தில் பரப்பபடும் வதந்தி..

சிரஞ்சிவி அநுமார் தான் எங்கள் சங்கத்தின் கொ.ப.செ என்பதை இங்கு கூற விளைகிறேன்.

எனது பெயரை ரிப்பேர் செய்யும் உங்களின் எந்தவித முயர்ச்சியும் வெற்றியடையாது :-). எல்லாம் எனது குரு, கொ.ப்.செ அநுமன் அவர்களின் அருள்.

5/16/2006 08:58:00 PM  
Blogger Karthik Jayanth said...

'தல' கவுத்திட்டயே !

சரி சமாளிக்கிறேன்..

அப்படியே இருந்தாலும் எங்களின் அண்ணன் அந்த களி தியாகத்தை செய்தது, இந்த புவியின் சம நிலையை கருதிதான்.

5/16/2006 09:02:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//எங்களின் கழகத்தை சிலர் புகழுக்காக தொடங்கப்பட்டது என்று சிலர் எள்ளி நகையாடும் போது, இவர்கள் சொல்லும் சொல்லின் பொருள் அறியாது பேசுகிறார்கள்.குருவே இவர்களை மன்னியும் என்று எங்களின் கழக முதல்வன், உலக மக்களுக்கே அருள் பாலிப்பவன்னை வேண்டுகிறேன்.//

பயம்...வந்துடுத்து போல இருக்கு...(ஹா..ஹா...ஹா...சிரிப்பு தாங்கல....)

5/16/2006 09:04:00 PM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

// பயம்...வந்துடுத்து போல இருக்கு...

பயம் என்ற சொல்லை அறியாத சுத்த வீரர்கள் நாங்கள்.. எங்கும், எப்போதும் காற்று போல சுற்றி திரியும் சுகந்திர பறவைகள்.

எந்த நேரத்திலும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இன்றி இப்புவியில் வலம் வருபவர்கள் நாங்கள்.

5/16/2006 09:16:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//பயம் என்ற சொல்லை அறியாத சுத்த வீரர்கள் நாங்கள்.. எங்கும், எப்போதும் காற்று போல சுற்றி திரியும் சுகந்திர பறவைகள்.

எந்த நேரத்திலும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இன்றி இப்புவியில் வலம் வருபவர்கள் நாங்கள்.//

அட..அட..அட..புல்லரிக்குதப்பு..

பதில் சொல்ல மாட்டீங்களா.. அப்படினா..ஊமைங்களா..இத ஏன்ப்பு முன்னமே சொல்லல..

5/16/2006 09:43:00 PM  
Blogger Karthik Jayanth said...

// அப்படினா..ஊமைங்களா

நீங்கள் எள்ளி நகையாடுவது எங்களுக்கு தெரியாமல் இல்லை..:-)

எங்களை கேள்வி கேட்பவர்கள் எவரும் இல்லை இந்த உலகில்.. என்பதே உண்மை

5/16/2006 09:49:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//எங்கும், எப்போதும் காற்று போல சுற்றி திரியும் சுகந்திர பறவைகள். //

over திரியாதீங்க..யாராவது சுட்டு கொழம்பு வைச்சிட போறாங்க..

5/16/2006 09:50:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//எள்ளி நகையாடுவது//

எள்ளி நகைன்னு ஏதாவது புது டிசைன் வந்திருக்கா?..

5/16/2006 09:52:00 PM  
Blogger Karthik Jayanth said...

// over திரியாதீங்க..யாராவது சுட்டு கொழம்பு வைச்சிட போறாங்க..

அதுக்கு சற்றும் இடமளிக்க மாட்டோம் நாங்கள்.

// எள்ளி நகைன்னு ஏதாவது புது டிசைன் வந்திருக்கா?..

நாங்கள் எளிமையே உருகொண்டவர்கள்.

5/16/2006 09:57:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

// over திரியாதீங்க..யாராவது சுட்டு கொழம்பு வைச்சிட போறாங்க..

அதுக்கு சற்றும் இடமளிக்க மாட்டோம் நாங்கள்.//

ஓ..உங்கள கொழம்பு செய்யாம வறுத்து எடுத்தா ok வா.. இடமளிப்பீங்களா?

5/16/2006 09:59:00 PM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

தம்பி என்ன நடக்குது...

கவிதா அவர்களின் பழைய பதிவுகளை பார்க்கலியா.. அவங்க மணமுடிந்த மகாலெச்சுமி..
நம் மூத்தவர்..
இளையவர்களின் மேல் கொண்ட அதித அன்பால் க.பி.கழகத்துக்கு இடையூறு செய்ய நினைக்கிறார்.
இந்த கழகத்தில் பெண்களுக்கும் இடமுண்டுன்னு சொல்லி.. அந்த பெண்புலியை.. தமிழ் ஜான்ஸிராணியை சமாதானப் படுத்தப்பார்..
தேவையில்லாமல்..பெரியவர்களை இகழ்வதல்ல நம் நோக்கம்.

5/16/2006 10:01:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

கவிதா.. கலக்குறீங்க.. நீங்க தான் நம்ம வா.வ.சங்கத்துக்கு சரியான ஆள்.. (வாலிபர்களை வருத்தப்படும் சங்கம்)...

உங்களை விட்டுட்டு கீதாவைக் கேட்டுகிட்டு இருந்தேனே!!!

5/16/2006 10:05:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//க.பி.கழகத்துக்கு இடையூறு செய்ய நினைக்கிறார்.//

இடையூறா?..அப்படீன்னா?

//அந்த பெண்புலியை.. தமிழ் ஜான்ஸிராணியை சமாதானப் படுத்தப்பார்.. //

ம்ம்..அது..

5/16/2006 10:07:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//பெரியவர்களை இகழ்வதல்ல நம் நோக்கம்.//
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. என்னதான் விவாதப் பதிவுகளாக எழுதினாலும் கவிதா அவர்கள் எத்தனை இளமையான உள்ளம் கொண்டவர்கள் என்பது அவர் வளர்க்கும் அணிலிடம் கேட்டாலே தெரியும்..

என்றும் பதினாறாகத் திரியும் எங்கள் கவிதாவை 'பெரியவர்' வயதானவர் என்று முத்திரை குத்த முயல்வதை நான் கடுமையாக ஆட்சேப்பிக்கிறேன்.. (வா.வ.சங்கத்தின் சார்பாக:) )

5/16/2006 10:08:00 PM  
Blogger Karthik Jayanth said...

// ஓ..உங்கள கொழம்பு செய்யாம வறுத்து எடுத்தா ஒக் வா.. இடமளிப்பீங்களா?

எவ்வுயிரும் துன்புற்றீருக்க அனுமதியோம் .. நாங்கள்


'தல' ,

கவிதா அவர்கள் நமது மன உறுதியை சோதிக்கிறார்கள் என்பதை அறியாதவனா நான்.. தங்கத்தை போன்று உருக்கி ஜொலிக்க செய்கிறார்கள்.. என்ன கவிதா சரியா ?

5/16/2006 10:08:00 PM  
Blogger Karthik Jayanth said...

அக்கா ஆற்றலரசி பொன்ஸ்,

உங்களை மாதிரி ஆயிரம் பேர் வந்தாலும் கொள்கைகளால் இணைந்த எங்களை யாரும் அசைக்க முடியாது :-)

5/16/2006 10:14:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

உங்க கட்சியோட கொள்கையே எனக்குச் சந்தேகம் ஏற்படுத்துவதா இருக்கு.. கொஞ்சம் இந்தப் பதிவுல சொல்லி இருக்கிற என்னோட கருத்துகளை நீங்களும் பாலாவும் கைப்புவும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தா நல்லா இருக்கும்!!!

5/16/2006 10:18:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//கவிதா அவர்கள் நமது மன உறுதியை சோதிக்கிறார்கள் என்பதை அறியாதவனா நான்.. தங்கத்தை போன்று உருக்கி ஜொலிக்க செய்கிறார்கள்.. என்ன கவிதா சரியா //

சோதனை இன்னும் முடியவில்லை..தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்ந்ந்ந்துதுதுது..கொண்டே இருக்கும்

5/16/2006 10:19:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//கவிதா.. கலக்குறீங்க.. நீங்க தான் நம்ம வா.வ.சங்கத்துக்கு சரியான ஆள்.. (வாலிபர்களை வருத்தப்படும் சங்கம்)... உங்களை விட்டுட்டு கீதாவைக் கேட்டுகிட்டு இருந்தேனே!!!//

பொன்ஸ்..என்ன பதவி என்ன பதவி..என்ன பதவி..சீக்கிரம் சொல்லுங்க.. எவ்வளவு தேரும்...?!! என்னோட % (சதவிகிதம்) எவ்வளவு...?..

5/16/2006 10:21:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//உங்களை மாதிரி ஆயிரம் பேர் வந்தாலும் கொள்கைகளால் இணைந்த எங்களை யாரும் அசைக்க முடியாது :-) //

ஆற்றலரசி...ஜான்சிராணி(நான் தான்) யும் சேர்ந்தோட்டோம்ல.. பாருங்க... நடக்க போறத.. நாங்க சொல்ல மாட்டோம்..செய்வோம்ல..செய்து காட்டுவோம்ல..

5/16/2006 10:23:00 PM  
Blogger Unknown said...

வாழ்க க.பி.க.வெல்க பேராசிரியர் கார்த்திக் ஜெயந்தின் கட்சி

5/16/2006 10:29:00 PM  
Blogger Suka said...

//
// ஓ..உங்கள கொழம்பு செய்யாம வறுத்து எடுத்தா ஒக் வா.. இடமளிப்பீங்களா?


//

கார்த்தி,

"வறுக்கப் படாத வாலிபர் சங்கம் " ஆரம்பிக்கப் போறீங்களா என்ன ?

5/24/2006 10:59:00 PM  

Post a Comment

<< Home