Friday, April 28, 2006

என்னவள்

ஒரு கோடி பூக்கள் கொண்டு என் ஜோடி பூவை செய்தானோ ?





உன் விழிகளின் அருகினில் என் வானம்
விழிகளின் வெகு தொலைவினில் என் தூக்கம்
என் ஐந்து புலன்களில் ஏக்கம்

உன் பெயரை சொல்லி என் இதயத்தில் தித்திதேன்
உன் சுவாசத்தில் இன்று வாழ்கிறேன்
இது ஏன் என்று யோசித்தேன்

உன்னை சந்தித்தேன், உன் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல





சுவடின்றி என்னுடன் நடந்திடும் உன் பாதங்கள்
ஒலியின்றி என் உதடுகள் உன்னுடன் பேசும்
தனிமையில் பெரும் புயலென வெளிவரும் என் சுவாசம்
பசி நீர் தூக்கம் இல்லாமல் ஊயிர் வாழ்கின்ற மாயங்கள்
ஆழ் கடல் போல் அமைதியாய் இருந்திட்ட மனம்
இன்று துளி துளியாய் சிதறியதே.





என் இதயமே உன் பெயரை சொல்லி துடிக்கிறதே
ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே
உன் சிரிப்பெனும் புயலில் என் மனம் தத்தி தடுமாறுதே
உன் நினைவு என்னை கத்தி இல்லாமல் கொல்லும்





இதழ் தாண்டாத வார்த்தைகள், இமை ஆடாத பார்வைகள்
கேட்காத ஓசைகள், இவை நான் கொன்ட மாற்றங்கள்
இதிலிருந்து மீள வழியுள்ளதா ?

2 Comments:

Blogger Unknown said...

இந்த மேட்டர் ப்ரேட் பிட்டுக்கு தெரியுமா?

பாத்து கார்த்திக்.. ஆப்பிரிக்காவுக்கு சமூகசேவைக்கு கூப்பிட்டுறப்போறாங்க..

6/19/2006 10:44:00 PM  
Blogger Karthik Jayanth said...

அம்பாள் இருக்குற எந்த இடத்துக்கும் இந்த எளியவன் செல்ல சித்தமாய் இருக்கிறேன் ஹி ஹி

6/19/2006 10:47:00 PM  

Post a Comment

<< Home