Friday, June 09, 2006

வ.வா.ச தொண்டனின் பதில்

நான் இந்த பதிவை எழுதுவது ஒரு பொறை கடையிலிருந்து, ஆகவே இங்கு ஓடும் பாட்டுக்களும், வசனங்களும் எனது பதிவில் தெரிந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

***

வ.வா. சங்கத்தின் மிக முக்கியஸ்தரான அக்கா ஆற்றலரசி பொன்ஸ் அவர்கள் சங்கத்துக்கு வந்ததாக கூறப்படும் ஒரு கடிதத்துக்கு பதில் சொல்லும் பதிவில், நான் இதுகாறும் அரசியல், பொது வாழ்வு, மக்கள் தொண்டு, இலக்கிய பணி, உருவாக்க சிந்தனை, பொருளாதார மேம்பாடு, இன்னும் என்னிலடங்காத்துறைகளில் நான் பெற்றிருந்த இடத்தை ஒரே நாளில் புல்டோசர் கொண்டு இடிக்கும் விதத்தில் இருப்பதாக சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் கருதுவதால், இந்த அறிக்கையை சங்கத்தின் தூண் என்று சொன்னாலும் கூட சங்கபலகையில் இடம் / அனுமதி மறுக்கபட்ட நிலையில் நானே எனது சொந்த செலவில், எனது சொந்த ஊடகத்தில் வெளியிடும் கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளேன்.

ஓராயிரம் ஆண்டுகள ஆகட்டுமே !
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே !

பகுத்தறிவு பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதானாலே

***





காய்ந்து போன பிட்சா, பர்கர், சூடான நாய் தான் உணவு என்று வருத்ததுடன் கூறும் அக்கா அவர்கள், கடந்த மாதம் மெக்டி பில் தொகையாக சில மில்லியன்களை சங்க நிதியிலிருந்து அடைத்தது ஏன் ?

வந்ததாக கூறப்படும் அந்த கடிதத்தின் ஒரிஜினல் எங்கே ?. அதிலிருந்தது அக்கா அவர்களின் கையெழுத்தை போலவே இருந்தது எனறு கூறப்பட்ட அந்த முக்கிய ஆவணங்கள் எங்கே ?

எனக்கு கொடுக்கபட்டுள்ள புதிய பெயரின் முன்னால் உள்ள அடைமொழியின் புரிதல் என்னவென்று விளக்கவேண்டும் என்ற எனது கோரிக்கை காற்றிலே கரைந்து போன மாயம் என்ன ?

கணக்கு கேட்கும் தலமையே "கண்களைத் திறந்து பார்..கண்ணாடியைத் துடைத்துப் போட்டுப்பார்.." என்று தனி மனித தாக்குதலில் இறங்கியது ஏன் ? சங்கத்தின் சிங்கங்கள் எல்லாம் கொள்கைகளால் கட்டுண்ட இமயங்கள் என்ற உண்மையை மறந்து தனது புதரக பயணத்தினால்தான் என்று தனி மனித புகழில் இறங்கியது ஏன் ?

வெண்பா என்று ஒரு பாடத்தை நடத்தி தமிழ் பரீட்சைக்கே பிட் அடித்த தல கைப்புவை நொந்து போக வைத்தது, எதிர் கட்சிகளின் தூண்டுதலினால்தானா என்ற நியாயமான கேள்விக்கு பதில் எங்கே ?

புதரகத்தில் தனியொருவானாக இட்லி செய்வது எவ்வளவு கடினம் என்று அறிந்திருந்தும், தோசை மட்டுமே சுடும் பேராசிரியர் என்று எள்ளி நகையாடுவது ஏன் ?

அனைத்திலும் மேலாக இவ்வாறு கேள்விகள் கேட்டால் நான் எதிர் கட்சிக்கு தாவிடுவேன் என்று தலமையை மிரட்டுவது எந்த வகை நியாயம் ?

15 Comments:

Anonymous Anonymous said...

என்னா கூட்டாளி, இந்த வார கமிட்மென்ட்ஸ் கொஞ்சம் அதிகமாப் பூட்ச்சோ!!

-- அல்கேட்ஸ்

6/11/2006 05:00:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

இப்படி அவதூறான குற்றச்சாட்டுகளை வச்சா இப்படிதான்.. யாருமே கண்டுக்கலை பாருங்க :))

வந்து சங்கக் கூட்டத்தைப் பாருங்க.. அதுல உங்களுக்கு ஏன் இடமில்லைன்னு கேள்வி கேட்டுகிட்டு இருக்கும் ஒரே ஜீவன் நான் தான்.. நினைவிருக்கட்டும்!!! :)

6/12/2006 12:46:00 PM  
Blogger Karthik Jayanth said...

ஐயா / அம்மா அனானி,

முதல்ல கமிட்மென்ட்ன்னா என்னன்னு சொல்லுங்க?

எற்கனவே இங்க 7 நாளும் சுத்தல்ல இருக்கு.

6/12/2006 02:50:00 PM  
Blogger நாகை சிவா said...

கார்த்திக், என் ங்க, உங்க வலைப்பக்கத்திற்கு முதல் முறையாக வந்தால் குற்றப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டு இருக்கின்றீர்க்கள். புரியாத காரணத்தால் தள்ளி நின்று கவனிக்கின்றேன்.
அப்புறம், க.பி.க.வில் சேர்வதற்க்கு சிபாரிசு செய்யவும்.
வரட்டா...........

6/13/2006 11:15:00 AM  
Blogger Karthik Jayanth said...

அக்கா ஆற்றலரசி,

//யாருமே கண்டுக்கலை பாருங்க :))

என்ன பண்ணுறது. இந்த உலகத்துல முதல்ல சத்தமா பேசுவங்க பேச்சுதான் எடுபடும்ன்னு சும்மாவ பெரியவங்க சொன்னாங்க.

கடைல வேலை செஞ்ச மத்த நேரந்தான் இங்க வந்து அப்பாடா மேய முடியுது..உங்கள மாதிரி இருக்குறது எல்லாம் குடுப்பினைதான் ;)

//அதுல உங்களுக்கு ஏன் இடமில்லைன்னு கேள்வி கேட்டுகிட்டு இருக்கும் ஒரே ஜீவன் நான் தான்.. நினைவிருக்கட்டும்!!! :)


உங்க பாசத்துக்கு முன்னால அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!..

6/13/2006 03:23:00 PM  
Blogger Santhosh said...

தம்பி பிரச்சார பிரங்கி மதுரை சுனாமி கார்த்திக்கின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்காமல் பசப்பு வார்த்தைகள் கூறி அவனை ஏமாற்ற நினைக்கும் பொன்ஸின் போக்கினை நான் வன்மையாக கண்டிக்கிறேன்(சோடா சொல்லுங்கப்பா வ.வா சங்க கணக்குல).

6/14/2006 01:47:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

இவ்வளவு ஆற அமர வந்து பதில் போடுவீங்க.. இதுக்கு சோடா வேறயா?

கார்த்திக், பாச மலரே.. இவங்களை எல்லாம் நம்பாதே.. சொல்றது சொல்லிட்டேன் :)

6/14/2006 04:44:00 PM  
Blogger Karthik Jayanth said...

நாகை சிவா,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

என்னத்த சொல்ல..கேள்வி கேட்டஙளேன்னு பதில் சொல்லுறேன் அவ்வளவுதான் :-)

6/14/2006 06:17:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

Karthik

asked somany questions, pons not even bothered to answer... mm.. I dont know whats up?!!!

6/14/2006 09:33:00 PM  
Blogger ALIF AHAMED said...

கபி கழகத்திற்க்கு

கிழே உள்ள ஈமெயில் முகவரியில் தொடர்புகொண்டால் கபி கழகத்தின் கொள்கை விளக்க மெயில் இலவசமாக அனுப்பபடும்

infoanony2000@yahoo.com

6/15/2006 03:30:00 AM  
Blogger Santhosh said...

//கார்த்திக், பாச மலரே.. இவங்களை எல்லாம் நம்பாதே.. சொல்றது சொல்லிட்டேன் :)//
நம்பாதே.. நம்பாதே... எனக்கு சோடா குடுக்காத பொன்ஸின் போக்கை கண்டித்து தம்பி பாண்டி இதற்கு மேல் சங்கதில் டீக்குடிப்பான்..

//asked somany questions, pons not even bothered to answer... mm.. I dont know whats up?!!!//
பாத்துக்கோ கார்த்திக்கு.. சொல்றதுக்கு எதும் இல்லை ஆற்றல் அரசியின் சமீபத்திய போக்கு சந்தேகம் அளிக்கும் படியா இருக்கு.. அடிக்கடி எதிர்கட்சி ஆபீஸ்பக்கம் அவங்களை அணில்குட்டி பாத்துஇருப்பதாக கேள்வி...


//கிழே உள்ள ஈமெயில் முகவரியில் தொடர்புகொண்டால் கபி கழகத்தின் கொள்கை விளக்க மெயில் இலவசமாக அனுப்பபடும்//
மாற்று கட்சியினருக்கு வீட்டு சுவற்றை இலவசமாக கொடுத்த கார்த்திக்கின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

6/15/2006 07:32:00 AM  
Blogger கவிதா | Kavitha said...

//பாத்துக்கோ கார்த்திக்கு.. சொல்றதுக்கு எதும் இல்லை ஆற்றல் அரசியின் சமீபத்திய போக்கு சந்தேகம் அளிக்கும் படியா இருக்கு.. அடிக்கடி எதிர்கட்சி ஆபீஸ்பக்கம் அவங்களை அணில்குட்டி பாத்துஇருப்பதாக கேள்வி...//

santhosh, anil kutty yai vambukku ezhukaatti ungalukku thookkam varaathaaa?

.aama..athu enna ethir katchi...?! enga erukku...yaara anil kutty parthathu.. ethu ellam ennai ketka solli anil kutty anipi erukku...anil kutty eppo vacation la erukku.

6/15/2006 09:07:00 PM  
Anonymous Anonymous said...

தேவ்க்கு கழுதைப் புலி கடி.. பேராசிரியர் இத்தனைக் கேள்விகள் கேட்டிருக்கிறார். என்ன கடி கிடைக்குமோ?

- அல் கேட்ஸ்

6/22/2006 06:04:00 AM  
Blogger சொஜ்ஜி said...

எனக்குத் தெரியாம அது யாருய்யா அல்கேட்ஸ்?

நான் தான்யா ஒரிஜினல் அல்கேட்ஸ்!!

இப்போ நான் கேட்கிறேன் பாரு :

தேவ்க்கு கழுதைப் புலி கடி.. பேராசிரியர் இத்தனைக் கேள்விகள் கேட்டிருக்கிறார். என்ன கடி கிடைக்குமோ?

- அல் கேட்ஸ்

6/22/2006 05:30:00 PM  
Blogger Karthik Jayanth said...

அல்கேட்ஸ் & கோ,

உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி :-)

6/22/2006 07:36:00 PM  

Post a Comment

<< Home